Monday, January 2, 2012

எல்லா ஆண்டுகளை விட வித்தியாசமாக நடை பெற்ற மகிழ்ச்சி விழா

எல்லா ஆண்டுகளை போல் இல்லாமல் கடந்த ஆண்டுகளை விட மேலும் மேலும் மெருகேறி புது பொலிவுடன் இந்த ஆண்டு கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு நிறைவு விழா இனிதே நடந்தேறியது. 

இந்த ஆண்டு மூன்று நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடந்தன கடைசி நாளில் பொதுக் கூட்டமும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.  30-12-2011 அன்று காலையில் துவங்கிய கைப்பந்து போட்டியானது மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. இந்த போட்டியில் பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன இதில் முதல் பரிசை திருவிதாங்கோடு அணியும் இரண்டாம் பரிசை வெள்ளிகோடு அணியும் பரிசுகளை வென்றன.    31-12-2011காலை ஏழு மணிக்கு கொற்றிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு அணையா விளக்கு ஒட்டம் துவங்கியது. இந்த அணையா விளக்கு ஓட்டத்தை பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் இந்த ஓட்டமானது குமாரபுரம், சித்திரங்கோடு, வேர்கிளம்பி , மேக்காமண்டபம் , முட்டைகாடு வழியாக மைதானத்தை வந்து அடைந்தது. பின்னர் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது இதில் குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. 
  1-1-2012  காலை ஏழு மணிக்கு பெருஞ்சிலம்பு முதல் கொற்றிகோடு வரையிலான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்ட பந்தயம் , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது. 
சிறப்பு போட்டியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டியானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இருந்தது அனைவரும் கைகளை தட்டி வீரர்களை உற்சாக படுத்தியது ரசிக்கும் விதமாக இருந்தது. 
திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்குமான  வடம் இழுத்தல் போட்டி நடைபெற்றது இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதும் விதமாக போட்டி மிகவும் திரில்லாக நடைபெற்றது கடைசியில் திருமணம் ஆனவர்கள் வெற்றி பெற்றார்கள்.   

மாலை  பொதுக்கூட்டமும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் பரிசு வழங்கலும்நடைபெற்றது. இரவு திரை இன்னிசை விருந்தோடு இனிதே முடிந்தது. விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.   

இந்த  ஆண்டின் சிறப்பு என்னவென்றால் பொதுக் கூட்டத்தின் போது எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு பொது மக்கள் வந்திருந்தார்கள். சிறுவர்கள் அதாவது நாளைய இயக்கத்தின் தூண்கள் மிகவும் சுறு சுறுப்பாக பணியாற்றினார்கள்.

பதிமூன்று ஆண்டுகள் அல்ல நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் பரவலாக பேசினார்கள். சிறந்த நிர்வாகத்தை இளைஞர்களால கொடுக்க முடியும் என்பதற்கு சாட்சி தான் இந்த இயக்கம்.

   

0 comments:

Post a Comment

Updates Via E-Mail